மனதை பாதிக்க வைக்கும் எண்ணங்கள் மற்றும் செயல்கள்:
மூளையில் உள்ள வேதிப்பொருளான செரடோனின் அளவு மாறுபடும் போது இந்நோய் வரலாம். நம்மில் சிலரின் மனதை பாதிக்க வைக்கும் எண்ணங்கள் மற்றும் செயல்களால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
திரும்பத் திரும்ப சில தேவையற்ற தவறான பயத்தையும், கவலையையும், தரக்கூடிய எண்ணங்கள் தொடர்ச்சியாக மனதில் எழுந்து ஒருவரின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும். நோயாளி அம்மாதிரியான எண்ணங்களை கட்டுப்படுத்த நினைத்தாலும் அவரையும் மீறி இடைவிடாது சுழற்சியாக மனதில் எண்ணங்கள் ஓடிக் கொண்டே இருக்கும். இதுவே மனதை ஆட்டி வைக்கும் எண்ணங்கள் எனப்படும்.
இம்மாதிரியான எண்ணங்கள் நோயாளிக்கு மனப்பதட்டத்தையும், அச்சத்தையும், மனக்கவலையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்துவதோடில்லாமல் அவர்களின் மன அமைதியையும், கவனத்தையும் பாதிக்கிறது தொடர்ந்து மருந்துகள் உட்கொள்வதனால் சிரொடோனின் அளவு சரிசெய்யப்பட்டு முழு நிவாரணம் பெறலாம்.
Talk to one of Sana healthistic coaches to understand how we can help.